பொதுவாக வீடுகளில் தங்கம், வெள்ளி நகைகள், ரொக்கப் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் திருடப்படுவது வழக்கம்.ஆனால் கோவை அருகே பெண்களின் உள்ளாடை யை திருடுவதுயே ஒருவன் தொழிலாக வைத்துள்ளான்.
கோவை துடியலூர் அருகே மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பில் இருக்கும் பெண்களின் உள்ளாடைகள் சில நாட்களாக காணாமல் போயுள்ளது.
இப்படி பெண்களின் சுடிதார், செருப்புகள், உள்ளாடைகள் ஆகியவை காணாமல் போனதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.அதில் ஒரு பெண்மணி நைட்டி போட்டுக்கொண்டு நடந்து வருவது போல் தெரிந்ததுள்ளது.
ஆனால் உற்றுப் பார்த்தபோது பெண்ணில்லை ஆண் என்று கண்டு பிடித்து உள்ளனர். நடந்து வந்த அந்த ஆண் பெண்களின் உள்ளாடைகளை அசால்டாக எடுத்துக்கொண்டு மீண்டும் சென்றுள்ளார். பின்பு திருடிய உள்ளாடைகளை ஒதுக்குப்புறமாக தீ வைத்து எரித்துள்ளார்.
இந்த சைக்கோ திருடரின் செயலால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் . மேலும் யார் இந்த திருடன் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.