தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
நான் கல்யாணம் செய்ய பெண் பார்த்து தருமாறு இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கீழ ஏர்மாள்புரத்தை சேர்ந்தவர் பரமசிவன். கூலி வேலை செய்து வரும் இவருக்கு 34 வயதாகியும் பெண் கிடைக்கவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், எனது தந்தைக்கு கோடிக்கணக்கில் பணம் இருந்தும், அவர் இன்னும் எனக்கு திருமணம் செய்து வைக்காமல் அடித்து துன்புறுத்துவதாகவும், இதனால் தனக்கு பெண் பார்த்து வைக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கை மனுவின் புகைப்படம் இணையங்களில் வைரலாக பரவியது. ஆனால் மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதா என தெரியவில்லை.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.