சட்டப்பேரவை தேர்தல் அட்டவனை அறிவித்த பிறகு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் அமைச்சர் செகோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அடிகனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,
அப்போது அவரிடம் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு அட்டவணை எப்போது வெளியிட படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் “2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து அட்டவணை வெளியிட்ட பின் பொதுத்தேர்வு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனைக்கு பின் தேர்வு அட்டவணை வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.