தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாக வெளியான குற்றசாட்டுக்கு ‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ என விஜய் சேதுபதி காட்டமான பதில் அளித்துள்ளர்.
சில தினங்களுக்கு முன் பிகில் படம் வசூல் தொடர்பாக நடிகர் விஜய், பிகில் தயாரிப்பாளர் AGS நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் ஆகியோர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையை தன்னோடு தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு தான் இந்த காட்டமான பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சோதனைக்கு காரணம் ஜேப்பியார் கல்லூரிகளின் நிறுவனர் ஜேப்பியாரின் மகள் ரெஜினா என்றும்; அவர் வெளிநாட்டு கிறித்தவ மிஷினரிகளிடமிருந்து பணம் பெற்று, அதன் மூலம் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதாகவும்.
அதற்கு நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி மற்றும் வேறு பல நடிகர்களும் மதம்மாறி மதமாற்றத்திற்கு உதவுவதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே உலா வந்தது. ஏனெனில் நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பம் ஜேப்பியரின் குடும்பம் மற்றும் அவரது மகள் ரெஜினாவுக்கு நெருக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் அவ்வாறு சமூகவைலதளங்களில் “key truth behind IT raids on Vijay” உலாவிய செய்திகளை விஜய் சேதுபதி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் போட்டு ‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ என்று கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக விஜய்-ன் படங்கள் சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.