2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் வேளாண்மை துறைக்கு ரூபாய் 11 ஆயிரத்து 894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அப்போது துணை முதலமைச்சர் அறிவித்தார்.
மேலும் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா அமைக்க ரூபாய் 77. 94 கோடி ரூபாய் ஒதுக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும்,
தேனி ,திண்டுக்கல்,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கடலூர், மதுரை உள்ளிட்ட 8 ஊர்களில் வேளாண்மை பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவவும்முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கரும்பு விவசாயம் நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு ரூபாய் 75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் ஆகியவை அமைக்கப்படும் எனவும் தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது