இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது. இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் Mucormycosis என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது.
இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும். இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய் தான் என்றாலும் குணப்படுத்த படக்கூடிய நோய் என்கின்றனர் மருத்துவர்கள்.
முன்னதாக, தமிழக மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பாக 5000 குப்பிகள் ஒதுக்க உத்தரவிட்டிருந்த நிலையில் மத்திய அரசு தற்போது, ஆம்போடெரிசின் – பி மருந்தை தமிழகத்துக்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.