11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வெழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் அக்டோபர் 14-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் அக்டோபர் 14- ஆம் தேதி முதல் வழங்கப்படும். மாணவர்கள் தங்களது பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும், அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறலாம். தலா 600 மதிப்பெண்கள் அடிப்படையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும்.
தேர்ச்சியடையாதவர்களுக்கு 11,12-ம் வகுப்பு மார்க்கை பதிவு செய்து ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வரும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.