தமிழகம்

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

11 மற்றும் 12-ம் வகுப்பு  தேர்வெழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் அக்டோபர் 14-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் அக்டோபர் 14- ஆம் தேதி முதல் வழங்கப்படும். மாணவர்கள் தங்களது பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். 

தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும், அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறலாம். தலா 600 மதிப்பெண்கள் அடிப்படையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும்.

ALSO READ  இணையவழி சேவை மூலம் பட்டா மாறுதல் வசதி!

தேர்ச்சியடையாதவர்களுக்கு 11,12-ம் வகுப்பு மார்க்கை பதிவு செய்து ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வரும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் நன்கொடை…

naveen santhakumar

இன்று முதல் பொங்கல் பண்டிகைக்கான பேருந்து முன்பதிவு தொடக்கம்:

naveen santhakumar

பள்ளி சுவர் விழுந்து விபத்து… பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

naveen santhakumar