தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழக காவல்துறையிலுள்ள 14,317 காலி இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் மற்றும் காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் காவல் துறை மேம்பாட்டு நடவடிக்கை குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறும்போது, தமிழக காவல் துறையின் தரம் மீட்டெடுக்கப்படும். காவல்துறை பணியிடங்களில் காலியாக உள்ள 14,317 இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும், தமிழ்நாடு காவல்துறைக்கு ₹8,930.29 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.