தமிழகம்

தொடர் தற்கொலைகள் – +2 மாணவி தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கரூரில் பிளஸ் 2 மாணவி பாலியல் துன்புறுத்தலால் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகேயுள்ள அரசு காலனியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி, வெண்ணெய்மலை தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவி அவரது டைரியில் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

ALSO READ  ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு… 
பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும் - பள்ளி மாணவி தற்கொலை

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியின் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம்குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.

கோவை மாணவியின் சோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் கொண்டவர்கள்:

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060) தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க புதிய வாட்ஸ் ஆப் எண், மின்னஞ்சல் அறிமுகம்

Admin

கனமழை எச்சரிக்கை – 26 மாவட்டங்களுக்கு விடுமுறை!

naveen santhakumar

என்எல்சி.க்கு ரூ.5 கோடி அபராதம்… 

naveen santhakumar