தமிழகம்

மதிமுகவின் 28 ஆம் ஆண்டு துவக்க விழா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதிமுகவின் 28 ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகக் கொடியினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்றி வைத்தார் அப்பொழுது பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது

நிகழ்வின் போது கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழக குமார், சுப்பிரமணியன்,மாவை மகேந்திரன்,மதிமுக எம்எல்ஏக்கள் சின்னப்பா, டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், சதன் திருமலைக்குமார் பகுதி செயலாளர்கள் தென்றல் நிசார்,நாசர் உள்ளிட்ட கழக மாவட்ட,பகுதி,வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “கழகம் இன்று 27 ஆம் ஆண்டிலிருந்து 28 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. கழகத்தை இத்தனை ஆண்டுகள் கழக தொண்டர்கள் காத்து நிற்கிறார்கள். இந்த கழகம் இன்னும் பல ஆண்டுகள் வாழையடி வாழையாக வளர்ந்து நிற்கும் என கூறினார்.

ALSO READ  பொதுமக்களின் வாகனங்களுடன் இணைந்தே தமிழக முதல்வரின் வாகனமும் சேர்ந்து பயணிக்கும்

தமிழகத்தில் தற்போதைய கட்டுப்பாடுகள்  தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வைகோ கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானதே என கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொதுமக்கள் பிரச்சனைகளை விரைந்து தீர்க்க ‘RACE Team’ துவக்கம்… 

naveen santhakumar

டிசம்பர் மாதத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழ்படங்கள் வெளியீடு- ஏன் தெரியுமா?

Admin

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் தீவிபத்து…!

naveen santhakumar