தமிழகம்

மாணவர்களுக்கு குஷி அறிவிப்பு – 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உள்ளாட்சித் தேர்தலுக்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளை (புதன்கிழமை) மற்றும் 9-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.

அனைத்து வகை பள்ளிகளும் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளதாலும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்ல உள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 8-ந் தேதி ஆகிய 2 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறையாகும்.

ALSO READ  பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி -பள்ளிக்கல்வித்துறை

மேலும், தேர்தல் நடைபெறும் நாட்களான நாளை (புதன்கிழமை) மற்றும் 9-ந்தேதி ஆகிய 2 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘அன்பை போதிப்போம்’… முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

naveen santhakumar

பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் :

Shobika

ஜன.31 வரை ஊரடங்கு… கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?

naveen santhakumar