தமிழகம்

தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக வார இறுதி நாடுகளில் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை வாழ் மக்கள் தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக வளாகங்களுக்கு சென்று பொருட்களை வாங்கிட ஏதுவாக வார இறுதி நாட்களான அக்டோபர் 24&26 வரை, 31& 01-நவம்பர் மற்றும் 07& 08 உள்ளிட்ட ஏழு நாட்களுக்கு மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில், 25 வழித்தடங்களில், 50 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் அட்டவணையில் உள்ளவாறு இயக்கப்பட உள்ளது. 

ALSO READ  செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.. 

பொதுமக்கள் இப்பேருந்துகளை எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக பேருந்தின் முகப்பில் ‘Deepavali Shopping Special’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது என்று மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு!

Shanthi

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி !

News Editor

தமிழகத்தில் அனல் காற்று; எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம் !

News Editor