போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து
மருத்துவ துறையினரும், காவல்துறையினரும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாட்கள் நடத்திய சோதனையில் 51 போலி மருத்துவர்களை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து
மருத்துவ துறையினரும், காவல்துறையினரும் இணைந்து கடந்த 3 நாட்கள் நடத்திய சோதனையில் 51 போலி மருத்துவர்களை கைது செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் 15 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவராக பயில்வதற்கான விதிகள் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வேறாக இருப்பதால், சிலர் தமிழ்நாட்டு விதிகளுக்கு உட்படாமல் தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் சட்ட விரோதமாக மருத்துவர்களாக பணியாற்றிவருவதாக விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போன்ற போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.