தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 6.34 மெட்ரிக் டன் ஆக்சிஜன் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 5 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதில் கூலிங் கூலரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுது நீக்கும் பணி தீவிரமாக நடைபெற்று. தற்போது பழுது நீக்கும் பணி சரி செய்யப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.
இன்று 6.34 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது இந்த லாரியை ஸ்டெர்லைட் ஆலையின் செயல் தலைமை அதிகாரி பங்கஜ் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.