அரசின் 7.5 % இடஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வாங்க கூடாது என்றும் மீறினால் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கட்டணம் முழுவதையும் தமிழக அரசு ஏற்பதாக அறிவித்து இருந்தது. ஆனால் ஒரு சில பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரை அடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் உள்பட எந்த வகை கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா அவர்கள் எச்சரித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
அரசுப் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் ஏஐசிடிஇ மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் ஏதேனும் கட்டணம் இதற்கு முன்னர் வசூலித்து இருந்தால் மாணவர்களிடம் அதை உடனே திருப்பி செலுத்த வேண்டும் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.