தமிழகம்

ஆவின் பால் இனி வீடு தேடி வரும்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சென்னையில் ஆவின் பால் வீடுகளுக்கே நேரடியாக வினியோகம் செய்யப்படும் என்றும், இதற்காக 2 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்கள் zomato, Dunzo நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ALSO READ  ஊரடங்கு நேரத்தில் கஞ்சா விற்பனை செய்த தனியார் நிறுவன உணவு டெலிவரி பாய் கைது. ...

இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், zomato, Dunzo நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, வெள்ளிக்கிழமை முதலே வீடுகளுக்கே சென்று விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் ஊரடங்கு நிலவி வரும் நிலையில், சென்னை மாநகர பொதுமக்களுக்கு தடையின்றி எந்த சிரமமும் இல்லாமல் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ  கோவையில் பரபரப்பு - கலெக்டர் காலில் விழுந்து கண்ணீர் சிந்திய விவசாயிகள்!

எனவே, பொது மக்கள், நுகர்வோர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த அறிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்னை எதிர்த்து போட்டியிட தயாரா ..?  உதயநிதிக்கு குஷ்பூ கேள்வி !

News Editor

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்!!

naveen santhakumar

எளிய தமிழில் மக்களின் வாழ்வியலைக் கூறிய எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா மறைவு !

News Editor