தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விலை வசூலிப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வாரத்திற்குள் அனைத்து மதுக்கடைகளிலும் விலை பட்டியல் வைக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத டாஸ்மாக் பார்கள் செயல்பாடு தொடர்பாக ஊழியர்கள், மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.