தமிழகம்

வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது – எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் சிறுமி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது மட்டும் நியாயம்  ஆகிவிடாது: எம்.எஸ்.பாஸ்கர் | msbhaskar press release - hindutamil.in

கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

பாலியல் தொல்லை சம்பவங்களை பிரபல குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்டித்துள்ளார்.

ALSO READ  நோயாளிகளை கவனிக்க அரசு மருத்துவமனையில் புதிய வழி !

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ.

தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை. என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா?

ALSO READ  கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ! 

சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போகடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும்து ஏற்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக்கூடாது. அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும். அதுவும் விரைவாக. இதுவே என் வேண்டுகோள்” என்று கூறி உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

12ம் வகுப்பு துணைத் தேர்வு- பதிவு தொடங்கியது..!

naveen santhakumar

பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் ரத்து- மு.க.ஸ்டாலின்

Shobika

உணவில்லாமல் தவித்த வெளிமாநில இளைஞர்கள்..உதவிய தமிழக காவலர் .. குவியும் வாழ்த்து..

naveen santhakumar