தமிழகம்

நான் அரசியலுக்கு கட்டாயம்  வருவேன் : நடிகர் பார்த்திபன் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் பார்த்திபனுக்கு  புதுச்சேரி அரசு சார்பில் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருதினை  ஒத்த செருப்பு படத்தை இயக்கியதற்காக வழங்கப்பட்டது. இவ்விருதினை புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான் நடிகர் பார்த்திபனுக்கு வழங்கினார்.


பின்னர் அந்த நிகழ்ச்சியை முடிந்தவுடன்  பத்திரிகையாளர்களை சந்த்தித்த நடிகர் பார்த்திபன் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசியவர், “எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. என்னுடைய முதல் படத்திலிருந்து ஒத்த செருப்பு படம் வரை நிறைய அரசியல் பேசி வருகிறேன். 


அரசியல் மூலமாக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா, அது ஒரு மனிதனின் சமூக அக்கறை. அது ஒரு கலைஞனுக்கு அதிகமாக இருக்கும். அந்த வகையில் நிஜமாக எனக்கு நிறைய அக்கறைகள் இருக்கிறது. எதிர்காலத்தில் நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன்” என்று நடிகர் பார்த்திபன் தன்னுடைய அரசியல் ஆசையை கூறியுள்ளார்.


Share
ALSO READ  விவசாயிகளை சந்திக்க சென்ற எம்.பி.கள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தம்  !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சட்டப்பேரவையில் கருணாநிதியின் படத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர் !

naveen santhakumar

சாதிக்குள் என்னை அடக்க நினைத்தார்கள்; சரத்குமார் குற்றசாட்டு !

News Editor

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்கே ஊரடங்கு தளர்வுகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

naveen santhakumar