சென்னை:
அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனது தந்தை தொடங்கி உள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது தந்தை அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கும் எந்த நடவடிக்கையும் என்னை கட்டுப்படுத்தாது. தந்தை தொடங்கி உள்ள கட்சியில் ரசிகர்கள் தங்களை இணைத்துக்கொள்ளவோ பணியாற்றவோ வேண்டாம் எனவும் கூறினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளா்ா என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன்.இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிா்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தொியப்படுத்திக்கொள்கிறேன்.
மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன். மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.