கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பொதுமக்களுக்கு ஆதார் கட்டாயம் என பல மருத்துவமனைகள் கூறியிருந்த நிலையில் தற்போது ஆதார் கட்டாயமில்லை என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அணியும் வெளியிட்ட அறிக்கையில், “ஆதார் இல்லை என்பதற்காக எந்த ஒரு அத்தியாவசிய சேவையையும் மறுக்க கூடாது. ஆதார் நெறிமுறைகளிலேயே விதிவிலக்கு கையாளுதல் நெறிமுறை உள்ளது.வேறு காரணங்களுக்காக ஒருவர் ஆதார் வைத்திருக்கவில்லை என்றால், ஆதார் சட்டத்தின் படி அத்தியாவசிய சேவைகளை அவருக்கு மறுக்கக் கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.