தமிழகம்

கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் கட்டாயமில்லை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 

ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பொதுமக்களுக்கு ஆதார் கட்டாயம் என பல மருத்துவமனைகள் கூறியிருந்த நிலையில் தற்போது ஆதார் கட்டாயமில்லை என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.

ALSO READ  பப்ஜி செயலிக்கு தடை?- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

இது தொடர்பாக அணியும் வெளியிட்ட அறிக்கையில், “ஆதார் இல்லை என்பதற்காக எந்த ஒரு அத்தியாவசிய சேவையையும் மறுக்க கூடாது. ஆதார் நெறிமுறைகளிலேயே விதிவிலக்கு கையாளுதல் நெறிமுறை உள்ளது.வேறு காரணங்களுக்காக ஒருவர் ஆதார் வைத்திருக்கவில்லை என்றால், ஆதார் சட்டத்தின் படி அத்தியாவசிய சேவைகளை அவருக்கு மறுக்கக் கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னையில் இரு நாட்களுக்கு மழை!

Shanthi

சென்னை, காஞ்சிபுரம்,ஈரோடு 31ம் தேதி வரை லாக் டவுன்… என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்படும்?? யார் யாருக்கு விதி விலக்கு அளிக்கப்படும்??

naveen santhakumar

அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவை: முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்…

naveen santhakumar