இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது. பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கொரோனா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,
சென்னையில் இதுவரை 50 சிறிய காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இது தொற்று அதிகமாகும் பட்சத்தில் இது மேலும் அதிகரிக்கக்கூடும். கடந்த முறை நம்மிடம் தடுப்பூசி ஏதுமில்லை ஆனால் இந்த முறை தடுப்பூசி நமக்கு பக்கபலமாக இருக்கும் என்று நம்புகிறோம். மக்கள் அனைவரும் கண்டிப்பாக இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், இரண்டு முறையும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி நமது உடலில் அதிகரிக்கும்.
ஆகையால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்றார். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை கண்டறிந்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை தடுப்பூசி போடுவதற்காக அறிவுறுத்த பாடுவார்கள் என்றார். கொரோனா அறிகுறி இருப்பவர்கள் கூச்சப்படாமல் எவ்வித தயக்கமும் இன்றி மாநகராட்சி தன்னார்வலர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
#Corona #coronanews #CoronaUpdate #TamilThisai #Chennai #ChennaiCommissinor #NewsUpdate #PoliticalUpdate