தமிழகம்

தமிழகம் முழுவதும் பிப் 1 to 20 வரை… அமைச்சர் திடீர் அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைசர் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, கொரோனாதொற்று பரவலைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை ஒரே முறையில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், இறுதி தேர்வுகள் மட்டும் நேரடியாக நடத்தப்படும் எனத் தெரிவித்தார். பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்றும், முறைகேடுகள் நடக்காத வகையில் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.


Share
ALSO READ  பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக கவர்னரிடம் மனு

News Editor

தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த வாகனங்கள் பறிமுதல்; எச்சரிக்கும் காவல்துறை !

News Editor

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை:

naveen santhakumar