தமிழகம்

சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்; மருத்துவமனை அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அதனையடுத்து சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், தமிழக அரசியலில் சசிகலாவின் வருகையை முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

அதனையடுத்து பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு  திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் நிமோனியாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சசிகலாவின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு நிலையாக உள்ளதாகவும், அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி திரைப்படம் ...!

சசிகலாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ குழுவின் தலைவர் ரமேஷ் கிருஷ்ணா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விக்டோரியா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதாகவும், இதில் அவருக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததாகவும் கூறினார். இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என்றும் அவர் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

12ம் வகுப்பு துணைத் தேர்வு- பதிவு தொடங்கியது..!

naveen santhakumar

என்.ஆர்.சி.யை தமிழகத்தில் கொண்டு வந்தால் அ.தி.முக. எதிர்க்கும் -அமைச்சர் உதயகுமார்

Admin

மெகா தடுப்பூசி முகாம் -இலக்கைத் தாண்டி தடுப்பூசி செலுத்திச் சாதனை!

Admin