தமிழகம்

கல்வி கற்கும் வயதில் இது தேவையா??? எங்கே போகிறது சிறார்களின் நடத்தை????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிவகங்கை:

காதலன் கோபத்தில் அடித்ததால், சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிவபுரி பகுதியை சார்ந்த 11 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அரியலூரை சார்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்,இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள், படிக்கும் வயதில் காதல் தேவையற்றது என்று அறிவுரை கூறியுள்ளனர்.

இந்த விஷயத்தை சிறுமி காதலனிடம் தெரிவிக்கவே, இவர்களுக்குள் எழுந்த வாக்குவாதத்தில் சிறுமியை காதலன் அடித்துள்ளான்.இதனால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறுமி தற்கொலை விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து தற்கொலைக்கான காரணத்தை கண்டறிந்தனர்.

ALSO READ  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை!

இதனைத்தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தலைமறைவாக உள்ள சிறுவனை தேடி வருகின்றனர். இளம்வயதில் ஏற்படும் எதிர்பாலின இயற்கை ஈர்ப்பு குறித்த விழிப்புணர்வு சரிவர இல்லாதது எப்படிப்பட்ட விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே சாட்சியாகவும் அமைந்துள்ளது.படிக்கும் வயதில் தேவையற்ற விஷயத்தில் ஈர்ப்பு கொண்டால் இதுபோல் தான் முடிவு அமையும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே- இது அடக்கமுடியாத யானை- இபிஎஸ்- ஸ்டாலின் காரசாரம்…!

naveen santhakumar

கவிஞர் வைரமுத்துவுக்கு உயரிய விருது;  நேரில் வாழ்த்திய முதல்வர் !

News Editor

ஊரடங்கு நீட்டிப்பு ..50,100,200 ரூபாய் தொகுப்புகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்  ! 

News Editor