தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்திற்கு சென்று அங்கு உள்ள முதல்வர் இருக்கையில் அமர்ந்து தனது பணியை தொடங்கினர். அதனையடுத்து முதல் முறையாக பணியை தொடங்கிய மு.க ஸ்டாலின்.₹4000 நிவாரண தொகை, .ஆவின் பால் லிட்டருக்கு ₹3 குறைப்பு, சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம், புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும் உள்ளிட்ட 5 புதிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.