விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் 107 – கொரோனா தடுப்பு தற்காலிக மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணன் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முன் களப்பணியாளர்கள் அதிக அளவில் தேவைப்படுவதால் தற்காலிகமாக பணியாற்றிட அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள் 5 பேருக்கும் செவியர்கள் 102பேருக்கும் மொத்தம் 107 பேருக்கு தற்காலிக பணி நியமன ஆணையை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்