ஆதார் கார்டு ஜெராக்ஸ்-ல தான் பஜ்ஜி மடிச்சு கொடுப்பார்களாம்..என்னடா நடக்குது இங்க..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஒரு பிரபலமான டீக்கடை உள்ளது. அந்த டீக்கடையில் டீ பிரபலமாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர் மடித்துக் கொடுக்கும் பொட்டலம் தான் பிரபலமாம்.அப்படி என்ன பிரபலம் என்று கேட்கிறீர்களா இந்த கடையில் சென்று நாம் பஜ்ஜி வாங்கினால் சாதாரண பேப்பரில் மடித்து கொடுக்க மாட்டார்களாம், ஆதார் கார்டு ஜெராக்ஸ் இல்லை என்றால் ரேஷன் கார்டு ஜெராக்ஸ் இவற்றில் தான் இந்த பஜ்ஜி, போண்டாவை மடித்து கொடுப்பார்களாம். இதை இவர் ஒரு வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஆனால் உண்மையில் டீக்கடை உரிமையாளரின் இந்த செயல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .ஆதார் கார்டு ஜெராக்ஸ் இவரின் கைக்கு எப்படி வருகிறது என்று சந்தேகம் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.
அந்த ஊரை சேர்ந்த அபுபக்கர் என்பவர் கடைக்கு சென்று பஜ்ஜி கேட்டுள்ளார் அப்போது அதேபோல் ஆதார் கார்டு ஜெராக்ஸ்-இல் மடித்து பஜ்ஜியை கொடுத்துள்ளார் கடை உரிமையாளர் .அதில் இருப்பது அவரின் முகம் தான் என்பதை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு உள்ளார்.
தனது ஆதார் கார்டு ஜெராக்ஸ் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்திருந்த நிலையில் இந்த டீக்கடைக்காரர் கடைக்கு எப்படி வந்தது என்று அவரின் மனதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.எனவே அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆதார் நகல்களை வைத்து அதிகாரிகள் என்ன செய்கின்றனர். எப்படி இந்த டீக்கடைக்கு ஆதார் கார்டு ஜெராக்ஸ் வருகிறது என்பதை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.