சென்னை:-
தமிழகத்தில் ஊரடங்கை சில தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13-ந் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.
அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் செயல்படும். வங்கிப் பரிவர்த்தனைகள், ஏற்கனவே அறிவித்ததுபோல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும்.
எனினும் மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம்போல, மாலை 5 மணி வரை செயல்படும். கிளைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள், மாற்று முறையில் செயல்பட வேண்டும்.
ரொக்கப் பரிவா்த்தனை, என்.இ.எப்.டி., ஆா்.டி.ஜி.எஸ்., வாயிலாக பணம் அனுப்புதல், அரசு வா்த்தகம், காசோலை பரிவா்த்தனை சேவைகளை வழங்க வேண்டும். ஏ.டி.எம்., ரொக்கம் செலுத்தும் இயந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதிசெய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.