தமிழகம்

ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள்; பரபரப்பை கிளப்பிய தூத்துக்குடி துறைமுகம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தூத்துக்குடி துறைமுகத்திற்கு பிரேசில் நாட்டிலிருந்து மரத்தடி ஏற்றி வந்த கப்பலில் மரத்தடிக்குள் பேக்கில் வைத்துக் கொண்டு வரப்பட்ட சுமார் 1000 கோடி மதிப்புள்ள 300 கிலோ கொக்கைன் போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வு துறை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை இன்று காலை 10 மணி அளவில் பிரேசில் நாட்டிலிருந்து மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகம் வழியாக தூத்துக்குடி வ உசி துறைமுகத்திற்கு ஒரு கப்பல் வந்துள்ளது. இந் த கப்பலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கொக்கைன்  என்ற போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் வந்து நின்ற கப்பலில் சோதனை செய்தனர். இதில் பல மணி நேர சோதனையில் பிரேசில் நாட்டில் இந்த கப்பலில் மரத்தடியில் கிடையே உள்ள ஒரு கருப்பு பேக்கில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ கொக்கைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது போதைப்பொருளை கைப்பற்றிய மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ALSO READ  மதிமுகவின் 28 ஆம் ஆண்டு துவக்க விழா !


மேலும் சுங்க இலாகா துறையினர் க்யூ பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போதை பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, தூத்துக்குடி துறைமுகம் வழியாக எங்கு கொண்டு செல்லப்பட உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நோயாளிக்கு மருத்துவரே தாயான தருணம்.. உணவு ஊட்டிய நெகிழ்ச்சி சம்பவம்..

naveen santhakumar

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அதிகாலையில் கைது..

naveen santhakumar

இனி சென்னை ஏர்போர்ட்டில் சினிமா பார்க்கலாம்…

Admin