பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ சட்டமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு, புதுப்பேட்டை, கொய்யாதோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், பொதுமக்களை சந்தித்து நடிகை குஷ்பூ பாஜகவிற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார்,
அதில், அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணியில் உள்ளது என தெரிவித்த குஷ்பு, தேவையில்லாமல் குழப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை தான் முடிவு செய்யும் எனவும், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சைக்கு 4 அல்லது 5 நாட்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய நடிகர் குஷ்பூ சட்டமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.