தமிழகம்

குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற பா.ஜ.கவைச் சேர்ந்த கார்த்திக்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோயம்பத்தூர்

கோயம்பத்தூர் மாவட்டத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஊராட்சியில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தல் கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.

குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.கவைச் சேர்ந்த அருள்ராஜ், அ.தி.மு.கவை சேர்ந்த வைத்தியலிங்கம், பா.ஜ.கவைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் போட்டியிட்டனர்.

ALSO READ  உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 27 ஆயிரம் பிரதிநிதிகள் நாளை பதவியேற்பு
ஒரே ஒரு வாக்கு... சொந்த குடும்பத்தினரின் ஓட்டு கூட விழாத சோகத்தில் பா.ஜ.க வேட்பாளர்!

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.கவைச் சேர்ந்த வேட்பாளர் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

சுயேட்சை வேட்பாளர் ஜெயராஜ் என்பவர் 240 வாக்குகளும், அ.தி.மு.கவைச் சேர்ந்த வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

பா.ஜ.கவிலிருந்து போட்டியிட்ட கார்த்திக்கிற்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. கார்த்திக் பா.ஜ.க இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.

ALSO READ  ஒட்டகப்பால் வேண்டி பிரதமர் மோடிக்கு ட்விட் செய்த பெண்மணி... ரயில்வே அதிரடி...

இதில் வித்தியாசமான தகவல் அவரது குடும்ப உறுப்பினர்களாக ஐந்து பேர் இருந்தும் ஒருவர்கூட கார்த்திக்கிற்கு வாக்களிக்கவில்லை என்பதுதான்.

மேலும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களே கார்த்திக்கிற்கு வாக்களிக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை ஊழியர் உயிரிழப்பு..!

News Editor

புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து :

naveen santhakumar

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு !

News Editor