மியூகோர் மைகோசிஸ் (mucormycosis) எனும் கருப்பு பூஞ்சை தொற்று நோய் தற்போது தீவிரமாக பரவி வருகிறது.தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலோனோர் உயிரிழக்கின்றனர். உயிர் பிழைக்கும் சிலருக்கு கண் அகற்றப்படும் சூழலும் ஏற்படுகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 40 க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில்,”சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்ட நபர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.