சென்னை :
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு பேருந்துகளில் 50% சதவீத பயணிகளுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து அண்மையில் 100% சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கும் என தமிழக அரசு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.பொதுமக்கள் சிரமமின்றி ஏதுவாக செல்லக்கூடிய வகையில் ஒரு மாதத்திற்கு முன்னரே பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கப்படுகிறது.
ஜனவரி மாதம் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மக்களின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.