தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளுவர் நகர், கோனார் தெருவை சேர்ந்தவர் முஸ்தபா (41). இறைச்சி கடை உரிமையாளர்.
கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தனது கடையில் கோழிக்கறி மற்றும் மட்டன் கறி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இறைச்சியை பறிமுதல் செய்த காவல்துறையினர் கடை உரிமையாளரான முகமது முஸ்தபா மற்றும் சாதிக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதனையடுத்து திருவெறும்பூர் வட்டாட்சியர் செல்வகணேஷ் மற்றும் திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் இறைச்சி கடைக்கு சீல் வைத்தனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.