ஆன்லைனில் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வெளியிட்ட ‘பப்ஜி’ மதன் கைது.
பப்ஜி விளையாடுவது எப்படி என்று லைவ் ஸ்ட்ரீமிங்கில் பணத்தை அள்ளிக் குவித்து வந்த யூ டியூபர் பப்ஜி மதன், லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது சிறுவர், சிறுமிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாக புகார் எழுந்தது. இன்ஸ்டாகிராமில் மதனை பின்பற்றும் சிறுமிகளையும், அவர் ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து மதனை விசாரணைக்கு வருமாறு போலீசார் உத்தரவிட்ட நிலையில் மதன் தலைமறைவானார். பப்ஜி மதன் தலைமறைவாகிய நிலையில், அவரது யூ டியூப் சேனலின் நிர்வாகியான அவரது மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், தர்மபுரியில் பதுங்கி இருந்த ‘பப்ஜி’ மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை மதனின் மீது சுமார் 120 புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.