சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது
அலையை தொடங்கிவிட்டது.இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டதில், அங்கு பயிற்சி எடுப்பவர்கள், பயிற்சி கொடுப்பவர்கள் என மொத்தம் 18 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.