சென்னை:
தமிழ்நாட்டில் வரும் 7, 8-ம் தேதிகளில் கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்லில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே இன்று முதல் 5 நாட்களுக்கு தென்மேற்கு, வடக்கு, மத்திய மேற்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, சேலம் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் மழை பெய்யலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இன்று முதல் 07-ம் தேதி வரை தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.