தமிழகத்தில் இந்தாண்டு சட்ட மன்ற தேர்தல் நடக்கவுள்ளதை தொடர்ந்து ஆளும் கட்சி உட்பட பல காட்சிகள் தங்களின் பரப்புரைகளை தொடங்கியுள்ளனர். அதனால் தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்னும் பிற காட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் வரும் 10 ஆம் தேதி தமிழகம் வருகின்றனர். 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், டிஜிபி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.அது மட்டுமில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும், தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.