தமிழகம்

செம்பரம்பாக்கம் ஏரி 20 அடியை தாண்டியது…தீவிர கண்காணிப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது. முழு கொள்ளளவான 24 அடியை வேகமாக நெருங்குகிறது.

சென்னையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

ALSO READ  வேலூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு

மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தாண்டி, முழு கொள்ளளவான 24 அடியை வேகமாக நெருங்கி வருகிறது. 

தற்போது நீர்மட்டம் 20 அடியை தாண்டியதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் யாரும் ஏரிப்பகுதிக்கு செல்லாத வகையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? அமைச்சர் செங்கோட்டையன் பதில் 

எந்த நேரத்திலும் நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்டியதும் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக காவல்துறையினருக்கு முதல்வரின் முத்தான அறிவிப்பு..!

Shobika

எச்சரிக்கையை மீறி போராட்டம்; 150 மாணவர்கள் கைது!

naveen santhakumar

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு !

News Editor