தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 .01. 2022 உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் விதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பததிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.
15.01.2022, 16.01.2022 கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பருதிகளில் ஒரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17.01.2022. 18.01.2022 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.