தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 10 நாட்களுக்கு பிறகு கடந்த 23 ம் தேதி மீண்டும் விமான சேவை தொடங்கியது. முதல் நாள் சென்னையில் இருந்து 16 பயணிகளுடன் விமானம் சேலம் வந்தது.
இதனையடுத்து நேற்றைய தினம் வெறும் 3 பயணிகளுடன் விமானம் சென்னையில் இருந்து சேலம் வந்தடைந்தது. தொடர்ந்து பயணிகள் வருகை இல்லாததால் வரும் 31ம் தேதி வரை சேலம் – சென்னை இடையேயான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.