திருவண்ணாமலையில் புதிதாகத் திறக்கப்பட்ட கடையில் சிக்கன் பிரியாணி ரூ.50, மட்டன் பிரியாணி ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டதால் அதை வாங்க நுற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் புதிதாகக் கொங்கு மெஸ் என்ற உணவகம் இன்று திறக்கப்பட்டது. துவக்க விழா சலுகையாக சிக்கன் பிரியாணி ரூ.50 என்றும் மட்டன் பிரியாணி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இங்கு 5 ரூபாய்க்கு டீயும்¸ 20 ரூபாய்க்கு மினி டிபனும் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியிருந்தனர். இதனால் காலை முதலே கடை முன்பு கூட்டம் சேர ஆரம்பித்து விட்டது. நேரம் ஆக¸ ஆக கூட்டம் அதிகரித்தது.
பகல் 1 மணிக்கெல்லாம் பிரியாணியை வாங்க முண்டியத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கடை முன்பு ரோட்டில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரியாணி வாங்கவாங்க நூற்றுக்கணக்கான அந்த கடையின் முன்பு மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா விதிமுறைகளை சிறிதும் பின்பற்றாமல் கடை உரிமையாளர்கள் வியாபாரத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.