தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 35 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று இரு தினங்களாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்நோய்க்கு, 474 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 4,734 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு,க ஸ்டாலின் வரும் 30 ஆம் தேதி கோவைக்கு நேரில் சென்று கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு .மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக கோவைக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.