கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடைகிறது. ஜனவரி 6ம் தேதி விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை நீட்டிப்பது,ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவது, பொது போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான நெறிமுறைகள் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.