சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வற்ற முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ம் தேதி முதல் 7-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருந்தது.
இந்நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ம் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஜூன் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா…???? என்பது குறித்து தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு சுகாதாரத்துறையினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.ஊரடங்கை மேலும் நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது குறித்து உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.