தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுபாடுகள், தளர்வுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சுழற்சி முறை மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் மக்கள் கூடும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், பொதுபோக்குவரத்து ஆகியவற்றிலும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கலாமா? என்பதும் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையின் முடிவில் மாலை முக்கிய கட்டுப்பாடுகளுடன் கூடிய அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.