தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கல்லூரி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு தேர்வுகள் றது செய்யப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு 10,11,12ம் வகுப்பில் அவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் 12ம் வகுப்பிற்கான மதிப்பெண் வழங்கப்டும்யென்று தமிழக அரசு தெரிவித்தது.
இதன்படி, ஜூலை 31-ம் தேதிக்குள் பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் இறுதிப்படுத்தப்படும் என்பதால் ஆகஸ்ட் 1-க்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மேலும், அனைத்து பல்கலைக்கழகங்களும் எம்.ஃபில். படிப்பை தொடர வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.