தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.
முழு ஊரடங்கால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு முதல் தவணையாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்ட நிலையில் அதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் பணி இன்று முதல் துவங்கியுள்ளது. ஒரு நாளைக்கு 200 டோக்கன்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் தமிழக அரசு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணமாக ரேஷனில் 13 மளிகை பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.