கொரோனா ஊரடங்கால் விழாக்களுக்கு தடை செய்துள்ளதால், பாலக்கோடு பகுதிகளில், அறுவடை செய்யாமல் தோட்டங்களிலியே கருகி வரும் பூக்கள்.தர்மபுரி மாவட்டத்தில், காடுசெட்டிப்பட்டி பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சாமந்தி, சம்பங்கி, செண்டுமல்லி, பட்டன்ரோஸ் ஆகியே பூ சாகுபடி செய்துள்ளனர்.
சீசனுக்கு ஏற்றார்போல் சாகுபடி செய்யும் பூக்களை அறுவடை செய்யும் விவசாயிகள் தர்மபுரி,ராயக்கோட்டை,கர்நாடாக ஆகிய பகுதிகளில் உள்ள பூமார்க்கெட்டுக்கு கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்வார்கள்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தர்மபுரி, ராயக்கோட்டை பூமார்க்கெட் மூடப்பட்டது. மேலும் திருவிழாக்கள் நடத்த தடை விதித்துள்ளதாலும், திருமணங்கள் நடத்த பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் திருமணங்களும் குறைந்துவிட்டது.
பொதுமக்களும் வீடுகளிலியே முடங்கி உள்ளதால், பூக்களை வாங்குவதற்கு ஆட்கள் இல்லாததால், பாலக்கோடு சுற்றி உள்ள பகுதிகளில், விவசாயிகள் சாகுபடி செய்த சாமந்தி, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை பறிக்காமல் தேட்டங்களிலியே அப்படியே விட்டுள்ளதால், பூக்கள் தேட்டங்களிலியே கருகியும், கால்நடைகளின் மேய்சல் நிலமாக மாறி உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.